Font size:
Print
பதிவு செய்யப்படாத சொகுசு வாகனம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவிற்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
அவருக்கு சொந்தமானதாக கூறப்படும் சொகுசு வாகனம் கொழும்பில் உள்ள நட்சத்திர ஹோட்டல் வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த நிலையில் கைப்பற்றப்பட்டது. அதன்பின்னர், குற்றப்புலனாய்வு பிரிவுக்கு அழைக்கப்பட்டிருந்த ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, விசாரணைக்கு பின்னர் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. (P)
ரஷ்யா உக்ரைனின் முக்கிய நகரை கைப்பற்றல் | Thedipaar NewsRelated Posts
